சென்னை: ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியில் 333 தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்புதல் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து 99 அணுகு பால கண்கள் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கர்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செங்குத்து லிப்ட் இடைவெளி கர்டரின் கட்டுமானம் முடியும் நிலையில் உள்ளது. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும்.