சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய ஏதுவாக விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சலிமா பானு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சாலை விபத்தில் எனது மகன்கள் இறந்தனர். எனவே, விபத்து தொடர்பான இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தபோது, விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தாக்கல் செய்யக் கூறி மனுவை தீர்ப்பாயம் திருப்பி அளித்து விட்டது.