பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், கணவரை இழந்து, தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் (22) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, அவர்கள் கடற்கரை, சினிமா என பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். அப்போது, மோனிஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி கூறியதால், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோனிஷ் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் மோனிஷ் கிடைக்கவில்லை.