கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில் ஆடைகள் அணிந்து வர விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: