உருளைக்கிழங்கு கம்பு தட்டை

செய்முறை:

பிரெட்டைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வேகவைத்த கம்பு, பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இன்னொரு சிறிய பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகுத்தூள் ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும். பின்னர், பிடித்து வைத்த உருண்டைகளைக் கைகளில் தட்டையாகத் தட்டி, கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தவாவில் எண்ணெய்விட்டு இதை வறுத்தும் எடுக்கலாம்.

Related Stories: