ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி கையில் கறுப்பு பட்டை அணிந்து 132 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கான பணிகளை கவனிக்க மாற்று பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுடன் ஒப்பந்த நிறுவனம் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.