தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்புவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில், அரசு தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர்  பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரும் 17ம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இணையதள முகவரி //www.tn.gov.in/ department/7 ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: