லண்டன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா, இங்கிலாந்து இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையே இந்த தீபாவளிக்கு முன்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இருதரப்பிலும் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எட்டப்பட்டது. ஆனால், சில பிரிவுகளில் முரண்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டது.