சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தலைச்சங்காடு கரைமேட்டில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 104 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக சாமுவேல் செல்லதுரை(54) பணியாற்றி வருகிறார். இங்கு பயிலும் 8ம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.