ஏலகிரி: ஜோலார்பேட்டை ரயில்வே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரி மலையில் அண்ணா அரங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அனைவரும் ஆடி, பாடி விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ரயில்வே பள்ளியில் தமிழ் வழியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992 வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏலகிரி மலையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் துரைமுருகன், சிவா, ஜெயச்சந்திரன் அசோக்குமார் சுரேஷ்குமார், வேலூர் காவல் துறை ஆய்வாளர் கவிதா, மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நட்பு திருவிழாவினை விமரிசையாக நடத்தினர்.