ஏலகிரி மலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு-அனைவரும் ஆடி, பாடி, விருந்துடன் கொண்டாட்டம்

ஏலகிரி: ஜோலார்பேட்டை ரயில்வே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரி மலையில் அண்ணா அரங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அனைவரும் ஆடி, பாடி விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.     திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ரயில்வே பள்ளியில் தமிழ் வழியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992 வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏலகிரி மலையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் துரைமுருகன், சிவா, ஜெயச்சந்திரன் அசோக்குமார் சுரேஷ்குமார், வேலூர் காவல் துறை ஆய்வாளர் கவிதா, மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நட்பு திருவிழாவினை விமரிசையாக நடத்தினர்.

மேலும் இவ்விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களின்  பிள்ளைகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் தங்களது குடும்பத்தை பற்றியும், செய்து வரும் பணிகளைப் பற்றியும் பழைய மாணவர்களுக்கு கூறி ஆடல், பாடல், நடனம், மற்றும் விருந்துடன் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடினர். மேலும் அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டு கண்ணீர் மல்க பிரிந்து சென்றனர். இவ்விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும், அவர்களுடைய குழந்தைகள், பெற்றோர்கள், நண்பர்கள், கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Related Stories: