நாகராஜகண்டிகை அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியை எடுத்து கொண்டால் சாதனைக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு மாணவ, மாணவிகள் சிறு வயதில் இருந்தே கலக்கி வருகின்றனர். ேதசிய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக, தமிழில் ஆர்வம், படிப்பை தவிர விளையாட்டு, யோகா, சிலம்பம், யோகாசனம் போன்றவற்றில் கலக்கி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 66 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த பல மாணவர்கள் தற்போது டாக்டர், இன்ஜினியர், செவிலியர், டெக்னீஷியன், மென்பொருள் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ (7) இந்த தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.