சென்னை: சென்னையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 1.1.2022 முதல் 25.11.2022 வரை சென்னையில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 265 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்ற 59 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.