தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா லக்கம்பட்டியை சேர்ந்த தீர்த்தகிரி மகன் அருண்குமார்(24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி, பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், வீட்டில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.