அராகிரஸ்: பிரேசிலில் 2 பள்ளிகளில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர். பிரேசிலின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில் 16வயதான மாணவன் தான் படித்த முன்னாள் பள்ளிக்கு துப்பாக்கியுடன் காரில் சென்றுள்ளான். பள்ளிக்குள் நுழைந்த மாணவன் அங்கிருந்த ஆசிரியர்களை பார்த்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து மற்றொரு பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் அங்கிருந்தவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.