பிரேசிலியா: பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சண்டோ மாகாணம் விக்டோரியா நகரத்தின் ஆர்க்ரூஸ் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு மாணவர்கள் நேற்று வழக்கம் போல் வந்தனர். காலை 10 மணி அளவில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அதேபோல் அருகில் இருந்த மற்றொரு பள்ளிக்கூடம் மீதும் தாக்குதல் நடத்தினார்.