சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் உதவியுடன் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதியை அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர். சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் உதவியுடன் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் இந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திற்கு முன், நிறுத்தங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்ய போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.