சென்னை: ரவுடிகளின் குற்றப்பதிவு செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ட்ராக் கேடி செயலியை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று அறிமுகப்படுத்தினார். ட்ராக் கேடி செயலியின் முதன்மை நோக்கம் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும். இதன் மூலம் மாதம்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் நேரடி கண்காணிப்பை உறுதி செய்யவும் முடியும்.