ஐநா: மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்தியாவின் முயற்சிகள் அரசியல் காரணங்களால் தடுக்கப்படுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வழிநடத்தியது ஹபீஸ் சயீத், ஜக்கியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டவர்கள் என தகவல் வெளியானது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத், ஜக்கியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட நபர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் ஐநா பாதுகாப்பு சபையின் கீழ் இயங்கும் அல்கொய்தா தடை குழுவின் தலைவருக்கு இந்திய தூதர் கடிதம் எழுதினார்.