புதுடெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதியும், டிசம்பர் 7ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 181 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வரும் டிசம்பர் 4ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பப்படாது.