புழல்: சென்னை மாதவரம் அருகே ரெட்டேரியில் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்குன்றம் தீயணைப்பு படையினருடன் போலீசார் விரைந்து சென்றனர். ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அந்த சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த ஆணின் சட்டையில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரித்தனர்.