சிம்லா: வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக குதிரை பேரத்தில் பாஜக இறங்கியுள்ளதாக இமாச்சல் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் கூறினார். இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் பாஜக தலைமை குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஜ்னீஷ் கிம்தா கூறுகையில், ‘இமாச்சல் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு முன்பாக ஆளும் பாஜக குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது.