கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே நிலையம் சந்திப்பு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கல், நெரூர், மோககனூர், சோமூர், புலியூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் மார்க்கெட், ரயில்வே நிலையம் வழியாக கரூர் சென்று வருகிறது. மேலும், ரயில்வே நிலையத்தில் இருந்து கரூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் இந்த சந்திப்பு பகுதியில் நின்றுதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.