பீஜிங்: சீனாவில் வர்த்தக நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் பயங்கர தீ விபத்தில் 38 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் ஆலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி அலறினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.