காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதூர் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). அதே பகுதியில் தனது வீட்டின் பின்புறம் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதியில் உள்ள குடோனை நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது குடோனில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1 டன் 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.