டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை - டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வருகிறது. ஆண்டுதோறும் டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில் 2022-ஆம் ஆண்டு டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திலும் இவ்விண்ணப்ப படிவத்தினை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் 25.11.2022-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: