ஆலந்தூர்: மீனம்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை தனது மொபட்டில் மீனம்பாக்கத்தில் இருந்து, ஜிஎஸ்டி சாலையை கடந்து பழவந்தாங்கல் பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது, சிக்னல் அருகே வேகமாக வந்த கார் கிருஷ்ணமூர்த்தி மொபட் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.