திருச்சி: ஜீவனாம்ச வழக்கில் ஆஜராக வந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, நீதிமன்றத்தில் மனைவியைப் பார்த்ததும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(63), ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி, ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.