பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19.80 லட்சம் ஒதுக்கி, அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. எனினும், அப்பள்ளி கட்டிட திறப்பு விழா பல்வேறு காரணங்களால் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.