கள்ளபிரான் ஊராட்சியில் கல்வி விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சியில் உள்ள வள்ளுவப்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வு  பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு தலைமை ஆசிரியர் சிவகுமார் தலைமை வகித்தார். பேரணியை ஊராட்சி தலைவர் சித்ரா  தனசேகர் துவக்கிவைத்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற்றோர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி வள்ளுவப்பாக்கம் கள்ளபிரான்புரம் பிரதான சாலை, நெய்குப்பி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. இதில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகள், கல்வி குறித்த பதாகைகளை ஏந்தியபடி சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: