இந்தோனேசியா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற படகில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி ஒரு படகு நேற்று சென்றது. இந்த படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் இந்தோனேசியாவின் பாலி நகரம் அருகே சென்றபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர்.