இசே: ஈரானில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் போராட்டங்களால் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் காரில் வந்த
மர்மநபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு குழந்தை, ஒரு பெண், 3 ஆண்கள் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 10 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.