ஆலந்தூர் தொகுதி திமுக சார்பில் பரணிபுத்தூரில் 20-ம் தேதி நடக்கும் இளைஞரணி பயிற்சி பாசறையில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி 163, 165, 166 ஆகிய வார்டுகளின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவர் அணிகளின் அவசர ஆலோசனை கூட்டம் ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் நடந்தது. ஆதம்பாக்கத்தில் 165வது வார்டில் சார்பில் நடந்த கூட்டத்திற்கு வட்டசெயலாளர் கே.ஆர். ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். 166வது வட்ட சார்பில் பழவந்தாங்கலில் நடந்த கூட்டத்திற்கு இ.உலகநாதன் தலைமை வகித்தார்.

மாநகராட்சி கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், வட்ட அவை தலைவர்கள் கு.விஜயன், ஏழுமலை, கங்காதரன் மற்றும் சதாசிவம், பி.ஆர்.சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளரும் மண்டல குழு தலைவருமான என்.சந்திரன்  கலந்துகொண்டு பேசுகையில், “ஆலந்தூர் தொகுதி சார்பில் இளைஞரணி  பயிற்சி பாசறை கூட்டம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் வரும் 20ம்தேதி பரணிபுத்தூரில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திராவிட இயக்க வரலாறு குறித்து பயிற்சி வகுப்பு நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் இளைஞரணி சீருடை அணிந்து கலந்துவேண்டும். திமுக வரலாறு பற்றி இளைஞர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்” என்றார்.

கூட்டத்தில், குழு உறுப்பினர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.பாபு, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், வெள்ளைச்சாமி, வேல்முருகன், மாரிமுத்து, என்.பெருமாள், ஆர்.கிறிஸ்டோபர், சுதாகர், மணிகண்டன், சேகர், கேபிள் ராஜா, விஜய் பாபு, ராஜேஷ், விக்னேஷ், வினோத், அஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: