சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் வசிப்பவர் சுந்தரவதனம் மகள் பரணி. இவர் ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பள்ளி புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. நனைந்த அந்த புத்தகங்களை மாணவி, வீட்டின் முன்பு சாலையில் வைத்து வெயிலில் காய வைத்தார்.