சென்னை: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த அன்பு மகன் சரவணன் (32). இவர், மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டியில், மிஸ்டர் தமிழ்நாடு என்ற பதக்கம் வென்றவர். மாவட்ட ஆணழகன் போட்டியில் 5 முறை வெற்றி பெற்றவர். திருவள்ளூரில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில், நேற்று தண்ணீர்குளத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதேபோல், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் நாகராஜ் (26), தனது பைக்கில் காக்களூர் வழியாக ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.