கோவை: கோவை காரமடை அருகே இரும்பொறை பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (27). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வருகிறார். சில மாதங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இவருக்கு கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் சுபாகன் நிஷா (35) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இவர் சுதர்சனிடம் அரசு அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், இதற்கு பணம் தர வேண்டியிருக்கும் எனக்கூறியுள்ளார். வேலைக்காக சுதர்சனிடம் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து, அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதர்சன், சுபாகன் நிஷாவிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்தார்.