பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் இன்று, கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாடுவிற்பனை மந்தத்தால் குறைவான விலைக்கு போனது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் இன்று நடந்த மாட்டு சந்தையில், மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மாடுகள் வரத்த ஓரளவு இருந்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதி சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், அந்நேரத்தில் மாடுவிற்பனை குறையும் என்பதால், இன்று நடந்த சந்தைநாளின்போது கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.