கொல்கத்தா: ஜனாதிபதியின் தோற்றம் குறித்த அமைச்சரின் கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார். மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி நந்திகிராமில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘‘சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்’’ என பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.