நகர்ப்புற உட்கட்டமைப்பு சார்பில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விருது

சென்னை: நகர்புற உட்கட்டமைப்பு சார்பில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்துக்கு 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.பஸ்பயணிகள் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வாட்ஸ் அப் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தீர்வு செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை பாராட்டி 2022-ம் வருடத்திற்குரிய விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் நகர்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலரிடம் டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் , விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இவ்விருதினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம்  மேலாண் இயக்குநர் கே. இளங்கோவன் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

Related Stories: