புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பைக்கில் சென்றபோது மின்னல் தாக்கி அண்ணன், தங்கை, சித்தப்பா என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் காவல் நிலைய எல்லைக்குபட்ட பறையூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சஞ்சய் (18), மகள் சஞ்சனா (16). திருப்புனவாசல் தனியார் பள்ளியில் சஞ்சய் 12ம் வகுப்பும், சஞ்சனா 10ம் வகுப்பும் படித்து வந்தனர். பள்ளி முடிந்த பிறகு தினமும் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது சென்று வீட்டுக்கு பைக்கில் அழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சஞ்சய், சஞ்சனாவை அழைத்து வர இவர்களது சித்தப்பா பறையூரை சேர்ந்த இளையராஜா (38) என்பவர் நேற்று மாலை தனது பைக்கில் திருப்புனவாசல் பள்ளிக்கு சென்றார்.