ஊட்டி: ஊட்டி அருகே வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊட்டி அருகே மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் உள்ள ஒன்றிய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் 2 கருஞ்சிறுத்தைகள் நுழைந்தன.