கடலூர் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது

கடலூர்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்  கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் புறநகர் பகுதியில் கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுப்புநகர், பழனியப்பா நகர், நாதன் நகர், சுதாகர் நகர், காந்தி நகர், தெய்வசிகாமணி நகர், ராஜீவ் காந்தி நகர், மணி நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேபோல், கோண்டூர் ராம் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தரப்பினர் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தொடர் மழை இருப்பதால், தற்போதுள்ள வடிகால் வாய்க்கால்களை உடனடியாக சீரமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: