அமெரிக்காவில் சோகம் வானில் சாகசம் செய்த போது 2 விமானம் மோதி வெடித்தது: 6 பேர் பரிதாப பலி

டெக்சாஸ்: அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதறியதில், அதிலிருந்த 6 பேரும் பலியாகினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சோவியத் கால ராணுவ விமானமும் இதில் பங்கேற்றது. அப்போது, பழங்கால விமானம் பறந்து கொண்டிருந்த போது குறுக்கே வந்த மற்றொரு விமானம் பயங்கரமாக மோதியது. இதில் 2 விமானங்கள் நொறுங்கி கீழே விழுந்து வெடித்து சிதறின. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் பலியானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெக்சாஸ் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘டல்லாஸ் நகரில் பழங்கால விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. போயிங் பி-17 விமானம் ஒன்று வானில் சாகசங்களை செய்து கொண்டிருந்தது. திடீரென்று பெல் பி-63 என்ற மற்றொரு விமானம் குறுக்கே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதிக் கொண்டன. அதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இரு விமானங்களும் தீயில் எரிந்தன. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தன. விமானி உட்பட 6 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது,’ என தெரிவித்தனர். விமானங்கள் மோதி வெடித்து சிதறும் பதைபதைக்க வைக்க வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைலராகி உள்ளன.

Related Stories: