திருமலை: கார் மீது அமர்ந்து சென்ற விவகாரம் தொடர்பாக ஜனசேனா கட்சி தலைவரும், பிரபல நடிகருமான பவன்கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திர மாநிலம், இப்டம் கிராமத்தில் சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் சென்றார். அப்போது சினிமாவில் வருவதுபோல், காரின் மீது அமர்ந்தபடி சென்றார். அந்த காரை பின்தொடர்ந்து கான்வாய்போல் பல கார்கள் சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.