விழுப்புரம்: விழுப்புரம் நகரப் பகுதியில் நேற்று முழுவதும் கன மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையினால், விழுப்புரம் மாவட்டம் பில்லூர் மந்தகரை கிராமத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று இரவு 12 மணியளவில் வேரோடு வீட்டின் மேல் விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அப்பகுதியில் மின் கம்பிகள் அருந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரு கிராமங்களுக்கு இடையான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.