ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் ஆணையம் பாஜவின் நீட்சியாக மாறிவிட்டது. பாஜ எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்யும். தேர்தல் ஆணையம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சுதந்திர அமைப்பு இல்லாத அளவிற்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில், பாஜ தலைமை மத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்தது. முஸ்லிம்கள் பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகிறார்கள்.