வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற தமிழ்நாடு

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  வங்கதேசம் லெவன் அணி தமிழ்நாடுக்கு எதிரான 4 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முகமது மிதுன் தலைமையிலான  வங்கதேச அணியில் சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்ற பல வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.  பாபா இந்தரஜித் தலைமையிலான  தமிழ்நாடு அணியில் நடராஜன், சாய் கிஷார், சித்தார்த், சிலம்பரசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடந்த  இந்த தொடரில்  முதல் ஆட்டத்தில் 11ரன் வித்தியாசத்திலும் 2வது ஆட்டத்தில் 50ரன் வித்தியாசத்திலும் த மிழ்நாடு வெற்றிப் பெற்றது.

அதன் பிறகு நேற்று முன்தினம் நடந்த 3வது ஆட்டத்தில் முழுவதும் புதிய வீரர்களுடன் தமிழ்நாடு அணி களம் கண்டது. அதில் வங்கதேசம் 19 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதுவே அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாகிப் போனது. காரணம் நேற்று நடைபெறுவதாக இருந்த கடைசி மற்றும் 4வது ஒருநாள் ஆட்டம் கனமழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் சர்வதேச அணிக்கு எதிரான தொடரை தமிழ்நாடு 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Related Stories: