பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகர் அடுத்த ஜோகி நவாடா பகுதியை சேர்ந்த வியாபாரி தரம்வீர் என்பவர் குடும்பத்துடன் புடான் பகுதியில் நடந்த கண்காட்சியை பார்க்க சென்றார். அப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அதைபார்த்த தரம்வீர், தான் அந்த பாம்பை பிடித்து பார்க்க வேண்டும் என்று பாம்பாட்டியிடம் கேட்டார். அவரும், பாம்பை அவரது கையில் பிடித்துக் கொடுத்தார். அதனை கையில் வாங்கிய தரம்வீர், தனது செல்போனை எடுத்து படமெடுத்து ஆடிய பாம்புடன் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது அந்த பாம்பு, அவரது இடது கையில்கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை கீழே போட்டுவிட்டார்.