சென்னை: 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முதுநிலை சட்டப்படிப்பு கலந்தாய்வாய் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தரப்பில் எதுவும் விளக்கம் கேட்கவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்கும் பட்சத்தில் நிச்சயம் விளக்கம் அளிக்கப்படும். 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, விளக்கம் அளித்துள்ளோம்.