சென்னை - வியாசர்பாடியில் பேருந்தில் பட்டாக்கத்திகளை வைத்து ரகளையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை - வியாசர்பாடியில் பேருந்தில் பட்டாக்கத்திகளை வைத்து ரகளையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தீபன், சாரதி ஆகியோர் பேருந்து படிகட்டில் தொங்கியப்படி அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் கத்தியை சாலையில் தேய்த்தபடி சென்ற வீடியோ வைரலான நிலையில் எம்கேபி நகர் போலீசார் இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories: