வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காளைமாடு வடிவில் விவசாயி ஒருவர், தனது வயலில் சாகுபடி செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகாளிதாஸ்(40). விவசாயி. இவர், தனது வயலின் நடுவே கலப்பினமாக இருந்து பெறப்பட்ட ஒரு அரியவகை நெல் ரகமான ``சின்னார்’’ என்ற சிவப்பு நெல் ரகத்தை காளை வடிவத்தில் நட்டு அதற்கு தீவனமான குதிரைவாலி புல்ரகத்தை சின்னார் நெல்லை சுற்றி நடவு செய்திருந்தார்.